Pages

குறள்

Thursday 28 October, 2010

தீப ஒளி

லகலக்கும் பண்டிகை நாட்கள் துவங்கி விட்டது. புத்தாடைகளும் பலரக பலகாரங்களும்
சிறப்பிக்க போகும் இந்த நாட்களில் மற்றொரு பிரதிநிதியாய்  பட்டாசுகளும் வானவேடிக்கைகளும் தங்கள் பங்கிற்கு உலகிற்கு பண்டிகை நாட்களை வண்ணமயமாக்க துடித்துக்கொண்டிருகின்றன.
கொண்டாட்டங்களுக்கு காமெராவை மூடியா  வைக்கமுடியும். சுற்றி சுற்றி படமெடுத்தலும் உடனே உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வேகமாய் அனுப்பி விட்டு சந்தோஷம் காண்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது.
ண்டிகை கால நேரங்களில் மின்னிடும் இந்த ஒளி வெள்ளங்களை படமெடுத்து கொள்ள எல்லாருக்கும் ஆசைதான். இதையும் மனதில் கொண்டு காமெரா தயாரித்தவர்கள் அதற்கென 'FIREWORKS எனப்படும் ஆப்சனை காம்பாக்ட் காமேராக்களில்  தந்திருக்கிறார்கள். ஆனால் அதை கொண்டு ஒளி வெள்ளங்களைதான் படமெடுக்க முடியுமே தவிர நம்மையும் சேர்த்து படமெடுக்கலாம் என்று நினைத்தால் கொஞ்சம் கஷ்டமே. ஏனென்றால் ஸ்லோ  ஷட்டருடன்  கூடிய அந்த ஆப்சனை போட்டால் நமது அசைவால் படம்  ஷேக் ஆகிவிடும்.
ஒளிகளை படம் எடுக்கும் போது கூட  நமது கை அசையாமல் இருக்க வேண்டும்.
இதற்காக ஸ்டாண்ட் பயன்படுத்தினால் இன்னும் நல்லது. மேலே காட்டப்பட்டுள்ள படமும் சாதாரண காம்பாக்ட் கமெராவில் தான் எடுத்திருந்தேன் (canon A520 4 mp)
கை அசையாமல்  இருந்தால் ஒரு 'O' மட்டுமல்ல சில எழுத்துக்களை  கூட எழுதியும் விடலாம்.
காம்பாக்ட் காமெராகாரர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியது தங்களுடைய காமெராவின் பிளாஷ் ஆப்சனை அனைத்து விடவேண்டும். பிளாஷ் ஆப்சன் அனைப்பதற்கு பிளாஷ் சிம்பல்களில்  பிளாஷ் வடிவத்தை வெட்டியது போல் இருக்கும் அந்த  சிம்பலை போட்டுகொண்டால் போதுமானது. நான் குறிப்பிட்டிருக்கும் முந்தய படங்களில்  டேபிள்டாப் சிலவற்றை தவிர எதிலும் பிளாஷ் பயன்பாடுகளே இருக்காது. பொதுவாகவே ஒரு நல்ல படம் தருவதற்கு நேரடியான பிளாஷ் உகந்தது அல்ல
வானத்தில் மின்னிடும் வேடிக்கைகளை  சிறிய காமேராக்களில் சிறிது சூம் செய்து கூட எடுத்துகொள்ளலாம். அதற்காக வானத்தில் ராக்கெட் விடுறோமே லைட் வெளிச்சம் இல்லையே என்று ப்ளாஷை போட்டீர்கள் என்றால்  ஒரு பயனும் கிடைக்க போவதில்லை
DSLR கமெராவில் பயணிப்பவர்கள் ஸ்டாண்ட் உபயோகித்து கொள்ளலாம். ISO கொஞ்சம் அதிகம் போடவேண்டி இருக்கும். வெளிச்சத்தை பொறுத்த விஷயம்.
ஸ்டாண்ட் உபயோகித்து நீங்களும்  உங்கள் பேரை கூட எழுதிப்பார்க்கலாம்.
ஆக இந்த பண்டிகை காலங்களில் மத்தாப்புக்களுக்கு  ஒரு தனி முக்கியத்துவம் இருக்கும் என்பதை நம்பலாம்.
அனைத்து அன்பர்களுக்கும் எனது இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் 

7 comments:

அந்நியன் said...
This comment has been removed by a blog administrator.
ராமலக்ஷ்மி said...

எளிமையாக விளக்கியுள்ளீர்கள். நல்ல பகிர்வு மெர்வின்.

ராமலக்ஷ்மி said...

ஒளிவட்டப் படமும் மிக அருமை.

Unknown said...

thanks madam. advance happy diwali

சாந்தி மாரியப்பன் said...

அழகான ஒளிவட்டம்..

Unknown said...

thanks amaithicharal

Happenings.......... said...

intha varuda deepavali nalien Dinamalar front page intha style

Post a Comment