Pages

குறள்

Saturday 2 October, 2010

அடடா மழைடா அட மழைடா......


வானம் இருட்டுவதும் வெளுப்பதுவமாக நாடகமாடிக்கொண்டிருந்தது.
மழை வந்தாலே சிறுவர்களுக்கு கொண்டாட்டம் தான். 
அதிலும் எங்கேயாவது பைப் வழியாக தண்ணீர் வந்தால் சொல்லவா வேண்டும். குற்றால அருவியிலே குளித்த கொண்டாட்டம் தான்.
நாமும் வழக்கம் போல் காமெரா  சகிதமாக மழையும் விட்டுவைக்காமல் களத்தில் குதித்தோம் சிறப்பாக பல படங்கள் குவிந்தது. 
ழைக்காலங்களில் படங்கள் எடுக்கும் பொழுது மிகவும் கவனம் தேவை.
தண்ணீர் கேமராவில் கண்டிப்பாக படக்கூடாது. இதற்காக காமெராவிற்கென ரெயின் கோட் நம்மூர் சென்னை போன்ற இடங்களில் 
photostoreகளில் கிடைக்கிறது. வாங்கி போர்த்திக்கொள்ளலாம் . மூடிய ரெயின் கோட்டை போட்டுகொண்டு  படம் எடுத்துகொள்ளலாம்.
குறிப்பாக கமெரா வாங்கும் பொழுதே சிலிக்கான் என்ற சிறிய  அளவில் 
உள்ள ஒரு பொதியை காமெரா பேகில் போட்டிருப்பார்கள். அதெல்லாம் 
எதற்கு என்று ஒதுக்கி விடாதீர்கள் . மழைக்காலங்களிலும் சரி 
கடல்கரையில் போட்டோ எடுத்தபின்பும் சரி காமெராவை நன்றாக 
துடைத்து விட்டு சிலிக்கான் பொதியை கட்டாயம் உள்ளே 
போட்டுக்கொள்ள வேண்டும். அதனால் லென்சிலும் காமெராவின் உட்பகுதிகளிலும்  பங்கஸ் ஆகாமல் பார்த்துக்கொள்ளலாம்.

னது கூடுதல் மழை படங்களுக்கு ........

0 comments:

Post a Comment