Pages

குறள்

Friday 22 October, 2010

நெருப்....."பூ".......

ண்ணீரில் பூ பூக்கலாம் தண்ணீரில் நெருப்பு பூக்குமா.......
டத்தை பார்த்தால் நமது போட்டோ ஆர்வலர்கள் கொஞ்சம் பெட்ரோலை கோப்பையில் ஊற்றி தீவைத்துவிடபோகிறார்கள். நண்பர்களே அவசரப்பட்டு எதுவும் செய்து விடாதீர்கள்.....
மைதியான சூழலில் கொஞ்சம் இது போன்ற விளையாட்டுகளில் (?) ஈடுபடுவது 
நமது வழக்கம். அதிலும் தீயுடன் விளையாடுவதென்றால்......
இந்த படத்தில் இரண்டிற்கு மேற்பட்ட டெக்னிக் உள்ளது. வழக்கம் போல் குடை விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சிகப்பு நிற தண்ணீரும் ஒய்ன் கப்பும் தாயாராக்கிவிட்டு லைட்டிங்  டெஸ்ட் எல்லாம் முடித்து விட்டு க்ளைய்மாக்ஸ் கட்டத்துக்குள் வந்தேன். 
பெட்ரோலை விட தண்ணீர் எடை கூடிய சமாசாரம் நினைவில் வந்ததுதான் இந்த படத்திற்கு மிக முக்கிய பாயிண்ட். ஓகே பெட்ரோல் சில நிமிடங்களில் மறைந்தே போய் விடும். எல்லாம் சில நொடிகளில் நடக்க வேண்டிய விஷயம். சாட் ரெடி. கோப்பையில் தண்ணீர் விடப்பட்டது, மேலே கொஞ்சம் பெட்ரோல் விடப்பட்டது  தீக்குச்சியை   பற்றவைத்து கோப்பையினுள்ளும் போட்டாகிவிட்டது. குபீர் என்று தீயும் தனது வேகத்தை காட்டதுவங்கிது. வேகமாய் ஒரு கல்லை அதனுள்  போட்டு உடனே கிளிக் செய்து விட்டேன். இவ்வளவும் சில நொடிகளில். அதுவும் தனிமையில். இது போன்ற நெருப்புடன் கூடிய விளையாட்டுகளை செய்வதாக இருந்தால் கவனமாக செய்யவும். ஒரு சில சொட்டு பெட்ரோல் பயன்படுத்தினால் போதுமானது.

6 comments:

மதுரை சரவணன் said...

//நெருப்பு பூக்குமா..?//

aapaththaa vilaikuduththu vaangka sollureenga. vaalththukkal. good photo.

Unknown said...

thanks saravanan

ராமலக்ஷ்மி said...

படம் அருமை. நிறைய சோதனை முயற்சிகள் செய்து வெற்றி பெறுகிறீர்கள். தொடருங்கள். வாழ்த்துக்கள்!

Unknown said...

நன்றி மேடம்

Anton said...

Suberb Mervin. Keep up!

Unknown said...

thanks anton sir

Post a Comment