Pages

குறள்

Friday 8 October, 2010

செல்லமே .....

குழந்தைகளை கண்டால் யாருக்குதான் படம் பிடிக்காமல் இருக்கதோன்றும். குழந்தைகளை படம் பிடிக்கத்தானே காமெராவை பெரும்பாலும் நாம் வாங்கி வைத்திருக்கிறோம்?

குழந்தைகளை படம் பிடிக்க இங்க பாரும்மா காமேராலே ஒரு கிளி வருது பாரு பாருன்னு 
பொதுவா சொல்வது  வழக்கம். 

யல்பான படங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளில் நிறைய கிடைக்கும். குழந்தைகளை அப்படியே விளையாட விட்டுவிடவேண்டும். அவர்களை சிறிது நேரம் கண்டு கொள்ளாதது போல் இருந்தால் அவர்கள் ஏதாவது விளையாடிகொண்டிருபார்கள் .அந்த நேரம் நாமும் நம் காமெராவை சுழற்றி சுழற்றி படமெடுத்துவிடவேண்டியதுதான்.

காம்பாக்ட் காமேராக்களில் இதெற்கென்றே கிட்ஸ் எனப்படும் ஆப்சன் இருக்கும். கிட்ஸ் ஆப்சன் ஓகே. அது என்ன வேலை செய்கிரதென்பதெல்லாம் நமக்கு  எங்கே தெரியும் கிட்ஸ் ஆப்சனை போடுவோம் படம் பிடிப்போம் அவ்வளவு தான். படம் வந்து விடும். சரிதான். கிட்ஸ் ஆப்சன் கொஞ்சம் வேகம் கூடிய ஷட்டரைகொண்டது . அதனால் அவர்களுடைய அசைவை துல்லியமாக கொஞ்சம் ஷேக் இல்லாமல் படம் பிடித்து விட முடியும்.

குழந்தைகள் கண்கள் பொதுவாக ரொம்ப கருப்பான முட்டை கரு போன்று தெளிவாக இருப்பதால் மானுவல்  காமெரா காரர்களுக்கு ஷார்ப் செய்வது மிகவும் வசதியான ஓன்று.
அதிலும் சூம் லென்ஸ் போட்டு குழந்தைகளை closs up  படம் பிடிப்பதே ஒரு அழகு தான்.இது போன்ற நேரங்களில் துல்லியமாக குழந்தைகளின் படங்களை எடுக்க சூம் லென்ஸ் வைத்திருப்பவர்கள் கண்ணைத்தான் போகஸ் செய்ய  வேண்டும்.



னது சில குழந்தைகள் படங்கள் 
http://www.orkut.co.in/Main#Album?uid=18126525686303786404&aid=1271032458

 

2 comments:

ராமலக்ஷ்மி said...

அழகுக் குட்டிச் செல்லம்.

விளக்கமும் ரசனை:)!

Unknown said...

நன்றி மேடம். இதெல்லாம் பேசிக் தகவல் போன்றது.
ஆழமாக சொல்ல நேரம் வேண்டுமல்லவா.......

Post a Comment